×

சாமியாபுரம் கூட்டுரோட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.27: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு சேலம்- அரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக, சேலம், அரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை சென்னை, திருப்பதி, திருச்சி, கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் பஸ்கள் கூட்டுரோடு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் அப்பகுதியில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் நீண்ட ேநரம், வெளியில், மழையில் காத்திருக்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நிழற்கூடம் அமைக்க கோரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மக்கள் பல முறை ேகாரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில், நிழற்கூடம் அமைக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : lake ,council ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!